கவிஞர்.கா.சிவலிங்கம்

நரைத்த முடி, நரைத்த தாடி என பாரம்பரியமாகச் சொல்லப்படும்அனுபவத்தின் அத்தைனை குணாதிசயங்களையும்பார்த்தமறுகணமே கவிஞர் என எண்ணத் தோன்றும் அமைதியையும்சேமித்த உருவம்தான் கவிஞர் கா.சிவலிங்கம்மூக்குக்கண்ணாடியின் கறுத்தச் சட்டத்தினூடு தெரியும் காந்தக் கண்களின்பார்வை இவரின் கம்பீரத்தை அணிசெய்யும்.
நான் இலக்கிய உலகில் நுழைந்ததில் இருந்து அனைத்துநிகழ்வுகளிலும் சந்திக்கக்கூடிய நபர்களில் இவரும் ஒருவர்.இலங்கை அரசின் கலைஞர்களுக்கான உயரிய விருதுகளில் ஒன்றான  ''கலாபூசனம்விருதின் சொந்தக்காரர்தனது கவிதைத்திறனால் மண்முனை வடக்குப் பிரதேச செயலககலாசாரப்பிரிவினால் வழங்கப்பெற்ற ''தேனகக் கலைச்சுடர்"விருதினைத் தனதாக்கிக் கொண்டவர்கவிதைகட்டுரைநாடகம்,மெல்லிசைப்பாடல்ஆய்வுநடிப்புநகைச்சுவைக் கதைஎனப்பல்வேறு தளங்களில்;  தமது படைப்பாற்றலை வெளியிட்டிருக்கும்ஒரு கலைஞர்இலக்கியவாதிஇருப்பினும் கவிதையே இவரதுபிரதானம். இன்றுவரை  புதுக்கவிதைகளால் கற்பழிக்கப்படாதவைஇவரது கவிதைகள்இவரின் நாளாந்த கடமைகளில் நூலகம்செல்வதும் வாசிப்பதும்  ஒன்றாகிப் போனவை.
                அது ஒரு றம்மியமான மாலைமட்டக்களப்பின்பொதுநூலகத்தின் அருகில் உள்ள காந்திப்பூங்காவாவியைமுத்தமிட்ட காற்று என்னையும் கட்டித் தழுவியபோது உடலுக்குமட்டுமல்ல மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டிருந்தது.ஐயாவுக்கு நாம் நிகழ்வொன்றுக்காய் அழைப்பிதழ்அனுப்பியிருந்தோம்வழமை போலவே விழாவின் நேரத்திற்குமுன்னதாகவே வந்திருந்தார்ஐயாவை வரவேற்கும்போது எனதுகாதில் ''நான் ஒன்றும் கள்ளனின் மகனல்லஎன்றார். அப்போதுஅவர்முகத்தில் புன்னகை உதிராமலேயே இருந்ததுஎனக்குஒன்றுமே புரியவில்லை மீண்டும் என்னவென்று கேட்டேன் '' கடிதம்எழுதும்போது கானா சிவலிங்கம் என்று எழுதாமல் காவன்னாசிவலிங்கம் என்று எழுதுங்கள்"  என்றார்அப்போதும் அவர்முகத்தில் அதே புன்னகை சற்றும் குறையாமலேயே இருந்ததுஅதன் பின்னர் ஒவ்வொரு முறையும் அவருக்கு முகவரிஎழுதும்போதும் இந் நிகழ்வுடன் அவரையும் மீட்டிப் பார்க்காமல்இருக்க முடியவில்லைஇப்படியான கவிஞருடனான எனதுசின்னச்சின்ன ஞாபகங்களை அசைபோட்டு மட்டக்களப்பு வாவியின்அழகை இரசித்துக்கொண்டிருந்த என்னை ''தம்பி என்ன யோசனை"என்ற குரல் வழமைக்குத்திருப்பியதுகடிகாரத்தைப் பார்த்தேன்சரியாக 4 மணிநான் அவரைச் சந்திக்க வருவதாகக் கூறிய அதேநேரம்.  அவர் வரும்போது அவரின் நடையை எமது கமராவுக்குள்சிக்க வைத்துவிடவேண்டும் என்பதற்காக நாம் பூங்காவிற்குநேரத்திற்குச் சற்று முன்னதாகவே வந்திருந்தோம்

















நிகழ்வுகளுக்கும் அப்படியே. இவர் பிந்தி வந்ததை நான் பார்க்கவில்லை. என்பதையும் அந்தச் சிறிய இடைவெளிக்குள் நினைத்துக்கொண்டு  கவிஞரை எனதருகாமையிலேயே அமரும்படி கூறினேன். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தான் எழுத்துலகில் கால் பதிக்கவென உந்துதலளித்த ஏதோ ஒரு எழுத்து அல்லது நபர் அமைந்திருக்கும் அல்லது அடைந்திருப்பர். எமது கவிஞருக்கு அது மகாகவி பாரதியின் பாஞ்சாலி சபதமாகவும் தனரது ஆசிரியர் வி.கி.இராசதுரையாகவும்  அமைத்திருக்கிறது.   கவிஞர் என்றால் கவிதை பற்றித்தான் பேச வேண்டுமா என்ற கேள்விக்கு நிச்சயமாக என்னிடமிருந்த விடை இல்லையென்பதுதான். இதனால் எமது பேச்சு வேறு வேறு தளங்களில் மிகவும் சுவாரசியமாகச் சென்றது.

முன்பெல்லாம்பிறந்த ஆண்டுசரியாகத்தெரியாதோர் தமதுபிறந்த ஆண்டைசொல்லும் போது''யப்பான் குண்டுபோட்ட ஆண்டில்பிறந்ததாகசொல்வார்கள்...."என்று தொடங்கிய   கவிஞர் தமது சிறு பராய நிகழ்வுகளை மீட்கும்கணங்களில் சிறுவனாகவே மாறியிருந்ததுடன் நினைவுகளுடன்என்னையும் அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றிருந்தார்.
ஆங்கில ஆசிரியராக வருவதற்கு விரும்பிய கவிஞரின் பாதைகணக்கியல் துறையிலேயே முடிவுற்றதுஇருந்தும் அவரதுஇலக்கிய வாழ்வைவிட அவரின் கணக்கியல் வாழ்வே மிகவும்சுவாரசியமானதுHSC படித்துவிட்டு காகித ஆலையில் ஒருகூலித்தொழிலாளியாகவே சேர்த்து படிப்படியாக அங்கு கடதாசிஅடுக்கும்வேலைநிறுவையாளர்எழுதுவினைஞர், கணக்கியல்உதவியாளர் என படிப்படியாக முன்னேறியிருக்கிறார்.அப்போதுதான் தான் இன்னும் படிக்க வேண்டும் என்ற எண்ணம்தேன்ற, 1988 இல் AAT படித்து அதில் சித்தியும் பெற்றிருக்கின்றார்.ஒவ்வொருமுறையும் அவர் சித்திபெற்ற செய்தியை அறிந்துகொள்ளும் முறை மிகமிகச் சுவாரசியமாயிருந்ததுதான் வேலைமுடிந்து வீட்டுக்கு வரும்போது வாசலில் தன் மனைவி நின்றுவாழ்த்து தெரிவித்தால்;, தான் சித்தி பெற்றிருப்பார் என்றுஅர்த்தமாம்உங்களைப்போலவே எனக்கும் இது எப்படிச் சாத்தியம்என்ற வினா எழுந்ததுஅதற்றும் விடை அவரிடமிருந்தேகிடைத்தது. ''அப்போதெல்லாம் தபாலில் மட்டுமே பரீட்சைமுடிவுகள் வரும் அந்தத் தபாலை அவதானே முதலில் பார்ப்பார்"எனக் கூறிச் சிரித்த அவரிடம் ''சித்திபெறவில்லை என்றால்...." எனத்தொடர்ந்தேன்.. அதற்கு முன்பைவிட அதிகமாகச் சிரித்துக்கொண்டே'' வேறென்ன பேச்சுத்தான்...."  என்றார்அப்போது தன் மனைவியின்நினைவு வந்திருக்க வேண்டும் அவர் கண்களில் சின்ன மாற்றத்தைஉணர்ந்தேன்உனர்வுகளை இடைமறித்து மீண்டும் அவர் தொழில்பக்கமே எனது வினாவைத் திருப்பினேன்கவிஞர் மீண்டும் தனதுஅதே உற்சாகத்துடன் தான் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர்நிறுவகத்தின் ''லைசென்ஸியேற்தரத்தில் சித்திபெற்றதைகூறும்போது மீண்டும் கவிஞரின் கண்களில் கண்ணீரைக் கண்டேன்.நிச்சயமாக அதன் சுவை இனிப்பாகத்தான் இருந்திருக்கும்அந்தச்சந்தர்ப்பத்தில் முருகனுக்கு  நன்றி சொல்லவும் கவிஞர்மறக்கவில்லைமுருகனுக்கு என்ன இலஞ்சம் கொடுத்தீர்கள் எனக்கேட்க நினைத்தேன் அன்று கேட்கவில்லை மீண்டும் கவிஞரைச்சந்திக்கும் போது நிச்சயம் கேட்டுவிடுவேன்.
                வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி இருப்பது போன்றே தான்பாடசாலைக் காலத்தில் எழுதிய கவிதைக்கு மூன்றாம் பரிசுபெற்றதை மிக மகிழ்ச்சியுடன் கூறும் கவிஞர்அதற்கு தியாகராசாஆசிரியரிடமிருந்து பெற்ற பரிசான அவரின் கையெழுத்திட்டு  வழங்கிய பாரதியார் கவிதைகள் நூலை தான் தவறி விட்டதைஎன்ணி வருத்தப்படுகின்றார்.         
அண்மையில் நீங்கள் சிலாகித்த கவிதைகள் யாருடையனஎன்றஎனது கேள்விக்குச் சற்றும் நேரமெடுக்காது கவிஞர்களானகௌரிதாசன்தாமரைத்தீவான்நிலா தமிழின்தாசன் ஆகியோரின்பெயர்களைக் சட்டென்று குறிப்பிட்ட கவிஞரின் வாசிப்பு பற்றிநயக்காமல் இருக்க முடியவில்லை.   
   இதுவரை 9 நாடகங்கள் எழுதியருக்கும் இவரிடமிருந்து நாடகம்தொடர்பாக பல சுவாரசியமான விடயங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்ட பின்னர்தான் இந்தக் கேள்வியைஆரம்பத்திலேயே கேட்டிருக்கலாம் என என்னுள் நினைத்துக்கொண்டேன்ஏனென்றால் அவை இன்னும் சுவையானதாகஇருந்தன. '' நான் ஒரு நாடகத்தில் வைத்தியராக நடித்திருந்தேன்...அப்போது “ஸ்ரெதஸ்கோப் " வைத்து ஒரு நோயாளியைப் பார்க்கவேண்டும் அப்படி நான் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில்சபையில் எல்லோரும் பலமானச் சிரித்துக் கொண்டிருந்தனர்.... "எனக் கூறும் போதே கவிஞரும் தன்னை மறந்து சிரித்துவிட்டார்அந்தச் சிரிப்புக்கு எத்தனை    கோடியும் கொடுக்கலாம் போலிருந்தது.ஆனந்தத்தின் உச்சம் அது வெள்ளை மனதின் வெள்ளித்திரை அது.ஏன் என்று நான் யோசிக்கத் தெடங்கும் முன் தான் ''ஸ்ரெதஸ்கோப்" காதில் வைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தமையே சபையோரின்சிரிப்புக்குக் காரணம் எனக் கூறியவாறேஅதிலிருந்து நாம் எதைச்செய்தாலும் அதை பல முறை பயிற்சி செய்துதான்செய்யவேண்டும்என்ற படிப்பினையைத் தான் பெற்றதாகவும்க கூறினார். என்னுடன் பகிர்ந்து கொண்டதிலிருந்து நான் ஒன்றைவிளங்கிக் கொண்டேன்இவரின் வெற்றிக்கு இவர் பெற்றதோல்விகளையே படிக்கற்களாகப் பயன் படுத்தியிருக்கிறார்.   இவரின் சுவாரசியப் பேச்சினிடையே நான் தயார் படுத்தி வந்துமறந்திருந்த '' உங்களை மிகவும் மகிழ்ச்சிப் படுத்திய நிகழ்ச்சிஎதுவென்ற கேள்வியை கேட்டபோது, 2008 இல் மண்முனை வடக்குகலாசாரப் பேரவையினால் கிடைக்கப்பெற்ற கலைஞர்கௌரவத்தினை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்இது உங்கள்''முகம்காட்டும் முழுநிலா நூல் வெளியீட்டுக்குப் பின்னர் நிகழ்ந்ததுதானேஎன நான் கூறியதும் நான் அவர்பற்றித் தெரிந்துவைத்திருப்பது குறித்து நிச்சயம் அவர் மகிழ்ந்திருப்பார் எனஎண்ணுகிறேன்அது தானே ஒரு கலைஞனுக்கு அல்லதுஎழுத்தாளனுக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய மகிழ்ச்சி.



















புதுக்கவிதை,நவீன கவிதைபற்றிய தனதுவிருப்பமின்மையை மிகவும் ஆணித்தனமாக முன்வைத்த இவரிடம்இறுதியாக நீங்கள் வளர்ந்துவரும் இளைய தலைமுறைக்கவிஞர்களுக்குக் கூறும் அறிவுரை என்ன எனக் கேட்டதற்கு....        ''மரபுக் கவிதை எழுதுங்கள்எதைச் செய்தாலும் செய்வதைத்தரமாகச் செய்யுங்கள்எந்தத் துறையில் ஈடுபாடாகஇருக்கின்றீர்களோ அந்தத் துறை பற்றி நன்றாக அறிந்துகொள்ளுங்கள்..." எனப் படபடவென்ற கூறிய பதில் நிச்சயமாகஎன்னுள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
                தான் சற்றும் எதிர்பாராத இந்தச் சந்திப்பு பற்றி தனதுமகிழ்ச்சியைத் தெரிவித்த அவரிடமிருந்தும் றம்மியமான சூழலைஎமக்களித்த காந்திப்பூங்காவினருகிலிருந்த ஆற்றின்சலசலப்பிலிருந்தும் வெளியேறும் போது கடிகாரத்தின் இருமுட்களும்  ஆறிலேயே ஒன்றித்திருந்தனஎன்னைப்போன்றே.


நேர்காணல் : .பா.மதன்
ஒளிப்படங்கள்         : .டணிஸ்கரன்.பா.மதன்
காலம்  : 29.09.2015