சிலம்பு

சிலம்பு என்பது சங்ககால தமிழ்  மக்களால் கைகளிலும் (கைச்சிலம்பு ) கால்களிலும் (காற்சிலம்பு) அணியப்பட்ட அணிகலனாகும். கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்பவல்லது. இதுவும் தற்போது ஒரு புனிதத் தன்மைகொண்ட சடங்குப் பொருளாக மட்டுமே பாவனையில் உள்ளது .
சிலம்பு

சிலம்பு

























ஒளிப்படங்கள் : சதாசிவம் மதன்