தமிழர்கள் தமது தொழில் முறையில் பல்வேறு வகையான நுட்பங்களைப் பயன்படுத்தினர். அந்தவகையில் மீனவர்கள் மீன்களைப் பிடிப்பதற்கு " கரப்பு" எனும் ஒருவகை கருவியை அல்லது நுட்பத்தைப் பயன்படுத்தினர். இச் செய்முறையினை "கரப்புக் குத்துதல்" என அழைத்தனர். இதிலுள்ள சிறப்பியல்பு என்னவெனில் மீன்களை உயிருடன் பிடித்தளுக்கான ஒரு யுக்தி இதன்மூலம் நிறைவேற்றப்படும். சிறிய குளங்கள் மற்றும் ஆழம் குறைந்த நீர் நிலைகளில் மீன் பிடிக்க இது பயன்படும். மீன்கள் செறிவாக உள்ள பகுதிகளில் இதனைக் குத்தி இக் கரப்பின் மேற்பகுதியில் காணப்படும் வாய் போன்ற துவரத்தினூடாக தமது கையை உட்செலுத்தி உள்ளே இருக்கும் மீன்களை உயிருடன் பிடித்தெடுப்பர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig7BAyP6AYQ3nzjejqXj2DmXCtzpYioyTlNcWhc-ORhoCgBLLBPC7B1Bj_S0bf25pFW351Ktux27TX0CKuP-kfVhfBa3EXe-G_pK6gvQ6gnGjxpn3XygaEFzTiWrWZweS7NQ3tdqOdsR8/s1600/comment.jpg)